அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, June 4, 2011

உண்மை வரிகள்....!

என்ன சொல்கிறாய் என்பதை விட என்ன செய்கிறாய் என்பதே நீ ...

நம்பிக்கை தான் பார்க்க முடியாத விஷயங்களுக்கு ஒரே ஆதாரம்...

பிரச்சனைகள் தான் மனிதர்கள் யார் என்று காட்டுகின்றன...

பொறுமையும் மனோதிடமும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

மனிதனுடைய மிகப் பெரிய குறைபாடு என்பது அவநம்பிக்கைதான்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது

உங்களைத் தவிர வேறு எதனாலும் உங்களுக்கு அமைதி தர முடியாது..

சந்தோசமாக ஏற்று கொள்ளும் போது சுமை தெரிவதில்லை...

மகத்தான விஷயங்கள் எப்பொழுதும
உங்களுக்குள்தான் ஆரம்பமாகின்றன..

ஒன்றை எந்த அளவு விரும்புகிறோமோ
அந்த அளவுக்கே அதைச் செய்கிறோம்...

தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து
இருக்கும் வாழ்வே சந்தோசமானது...

எந்தத் துயரமும் காலத்தால் குறைக்கப்படாமல்
மிருதுவாக்கப் படாமல் போனதில்லை ..

நம்மில் நாம் திருப்தி காணவிட்டால்
அதை வெளியே தேடுவது பயனற்றது

மனதில் ஏற்படும் எத்தகைய பயங்களையும்
நீங்களாகவே முறியடித்துக் கொள்ள முடியும்

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும்
ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

தயக்கத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ளும்போது
தயக்கம் தவிடுபொடியாகிறது

ஒரு மனிதனின் குணநலன்தான்
அவன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒருவர்...

உங்கள் ஆன்மாவை பொருத்தவரை
அதனால் இயலாதது என்று எதுவும் இல்லை

பலவீனமானவர்களின் வழியிலே தடைகல்லாய் இருப்பது
பலமுடையவர்களின் வழியிலே படிக்கல்லாகவே இருக்கும்...

திருப்தியான மனம் தான் உலகில்
ஒருவனக்குக் கிடைக்க கூடிய உயர்ந்த ஆசீர்வாதம்...

சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்
மோசமானவை ஒரு போதும் நிகழாது...

வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு
வருவதால் பலர் அதை தவறவிடுகிறார்கள்...

கைவிட நேரும் முயற்சி என்னைக் கலங்கடிப்பது இல்லை
அது முன்னேற்றத்திற்குப் படி அமைத்துக் கொடுக்கிறது...

முன்னேற்றத்திற்காக செய்யப்படும்
எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாவதில்லை...

நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால்
நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள்...

உங்களுக்கு எது செய்யப்டக்கூடாது என்று விரும்புகிறிர்களோ
அதை அடுத்தவர்களுக்கு செய்யாதிர்கள்...

இயற்கையால் ஏற்றுக் கொள்ளும்படி
படைக்கப்படாத எதுவும் எவருக்கும் ஏற்படுவதில்லை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது...

நம் வீட்டின் கணப்பின் அருகே சந்தோஷம் விளைகிறது
அதை அறியாதவர்களின் தோட்டத்தில் அதைப் பறிக்க முடியாது...

முற்றிலும் புதியதாக ஆரம்பிப்பது அவமானமில்லை...
அது ஒரு வாய்ப்பு...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

நீங்கள் கைவிட்டால் தவிர எப்பொழுதும்... நீங்கள் தோற்பதில்லை...
எப்போது நீங்கள் நினைத்தாலும் புதிதாக நீங்கள் ஆரம்பிக்கலாம்...

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வரை கவலை...
அச்சம்.. பொறாமை உங்களிடம் குடி கொண்டிருக்கும்...

அடுத்தவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
நமது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஆயுள் கிடையாது...

நீ ஒருவரால் நேசிக்கப்படும் போது பலம் பெறுகிறாய்...
நீ ஒருவனை நேசிக்கும் போது தைரியம் அடைகிறாய்...

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல...
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவனாலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது ...

வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன்..
வாத்துக்களோடு நீந்திக் கொண்டிருக்க கூடாது...

வாழ்வின் சோதனைகளைக் கடந்து மேலெழ உதவும் சமநிலை
தவிர பொறுமை என்பது வேறென்ன ?

தோல்வியடைவது கஷ்டமானது தான்...
ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது அதை விட மோசமானது...

எப்பொழுதும் அன்பாய் இருங்கள்... நேற்றைப் பற்றி கவலையும்...
இன்றைய... நாளைய பயமும் இருக்காது... அன்பு காலத்தைக் கடந்தது...

தோல்வி என்பது உங்கள் மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனை
என்பதை உணர்ந்தால் அடுத்த கட்டத்திற்கு எளிதில் செல்லலாம்...

நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால் எப்போதும்
பிறரோடு உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்கக் கூடாது...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

இன்றைய தினத்தை புதிய நாளாக மாற்றுங்கள்...
நாளைய தினம் ஆக்கப்பூர்வமான பொழுதாக விடியும்...

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...

உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...

சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்
பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு
அந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...

உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்
மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்
என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...

உங்களை நீங்களே தூய்மையாக
பிரகாசமாக வைத்து கொள்வது நல்லது...
உலகை நீங்கள் காண உதவும் ஜன்னல் நீங்கள் தான்...

அச்சம் வரும்போதேல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள்...
நம்பிக்கையின் உயரம்... அச்சத்தின் உயரத்தை விட அதிகமாய்
இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்கைக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதரும்...
ஒன்று உங்களுக்கு எதாவது கற்றுகொடுக்க வந்திருக்கிறார்...
அல்லது - உங்களிடமிருந்து எதாவது கற்று கொள்ள வந்திருக்கிறார் ..

சோம்பேறித்தனம் என்பது பணம் மாதிரி...
உங்களிடம் அது நிறைய இருக்க இருக்க மேலும் மேலும்
வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்...

சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகின்றனர்
அது உங்கள் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது
திருப்தியான மனம் எல்லாருக்கும் அதைத் தருகிறது...

நம்முடைய காலகட்டத்தில் புனிதத்துவத்தை
நோக்கிச் செல்லும் பாதை செயல் உலகின்
ஊடகச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்...

நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால்... சோம்பேறி...
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்... சுருசுறுப்பானவர்...
நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால்... வெற்றியாளர்...

உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை
நீங்கள் அறிந்து கொள்ள ஒரே வழி
இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருப்பது தான்

சிரமங்களை இரண்டு விதமாய் எதிர்கொள்ளலாம்
சிரமங்களை சரி செய்வது அல்லது
அதை எதிர்கொள்ளும் விதமாய் நம்மை சரி செய்வது...

நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல...
உங்களிடம் என்ன மிச்சமிருக்கிறது
என்பது தான் முக்கியம்...

எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால்...
அது எதிர்கால வெற்றியை வரையறை
செய்யும் வாய்ப்பாக அமைகிறது...

சந்தோசத்திற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...
அது நமது எல்லைக்கு உட்படாதவற்றைப் பற்றி
கவலைப்படுவதை நிறுத்துவது...

அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து
அவர்களுக்காக எதாவது செய்யாவிட்டால்...
சந்தோசத்திற்கான சிறந்த வழியை இழந்து விடுகிறோம்...

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை
சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
பிறகு வருவதை எதிர்கொள்ளுங்கள்...

சந்தோஷத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன்
அதிக இன்பமடைவான்... மிக உயர்ந்த... பல தரப்பட்ட...
நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே...

தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு தன்னைத் தொடர்ந்து
புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில் தான்
மனிதனின் நல்ல குணம் இருக்கிறது...

புதிய சிந்தனைகளை... வேதங்களை தேடி ஓடாதிர்கள்...
உங்களுக்குள்ளேயே உருவாக்குங்கள்..
அதுவே உங்களை உலகத்திற்கு அடையாளம் காட்டும்...

உன் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இரு...
அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே...
நோக்கத்தை நோக்கி செயல்படு...

பெரும்பாலான சோதனைகளில் முக்கிய துன்பம் என்பது
நாம் உண்மையில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதல்ல...
நாம் எவ்வளவு எதிர்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது...

ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளத் தேவைப்படுவது
எதுவென்றால் அவர் தன்னுடைய உணர்வு நிலையைத்
தானாகவே மாற்றிக் கொள்வது தான்...

தனக்குத் தானே உதவி கொள்ளாமல் எவராலும்
அடுத்தவருக்கு உதவ முடியாது என்பது
உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று...

உங்கள் கற்பனை எவ்வளவு வலிமை பொருந்தியதாக
உங்களை கனவு காணசெய்கிறதோ...
அதுவே நனவுகளை முன்னோக்கி
மனத்திலே வடிவமைத்து கொடுக்கிறது...

அதுத்தவர்களுக்கு நன்மை செய்வது கடமையல்ல
அது ஒரு சந்தோஷம்...
ஏனெனில் அது உங்கள் சொந்த ஆரோக்கியத்தையும்
சந்தோசத்தையும் அதிகரிக்கிறது...

உன்னுடைய பலம் எது பலவீனம் எது
என்று பட்டியலிடுவதை விட
பலத்தை மேன்மேலும் அதிகப்படுத்தும் போது
பலவீனம் காணமல் போகிறது...

சோம்பலுக்கு முன்னால் விலைமதிப்புள்ள
வாய்ப்புக்கள் பயனில்லாதவை...
ஆனால்.. கடுமையான உழைப்புக்கு முன்னால் மிக சிறிய
வாய்ப்புக்கள் கூட விலை மதிப்புள்ளவை...

சிக்கல்களை... சிக்கல் என்று நினைக்கும் போது
அவை பெரிதாகத் தோன்றும்...
சிக்கல்களை சவால்கள் என்று கருதும்போது...
எதிர்கொள்ளும் உந்து சக்தி உருவாகும்...

நாளையை நிறைவேற்றுவதில் உள்ளே
ஒரே தடை நமது இன்றைய சந்தேகங்கள் தான்
வலிமையான செயல்பூர்வமான
நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவோம்...

மற்றவர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதில்
இருந்து புதியதாகச் செய்ய பார்...
நீ எதை அடைய விரும்புகிறாயோ அதற்கு
அதை ஒத்துப் போகச் செய்வதில்தான் நீ வெளிபடுகிறாய்...

இந்த வாழ்வில் மன்னிக்க எதாவது
உங்களுக்கு இருந்தால் உடனே மான்னியுங்கள்...
மன்னிக்காமல் போவதை விட
மெதுவாக மன்னிப்பது மேலானது ...

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது
வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்குத் தெரிவதில்லை...
எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்...!

உங்களிடம் ஏற்கனவே என்ன இருக்கிறது என்ன இல்லை
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருகாதிர்கள்...
உங்களிடம் இருப்பதில் சிறந்தது இல்லாவிட்டால் அதை
எவ்வளவு ஆவலோடு தேடுவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்...

முக்கியமான ஒவ்வொரு அனுபவமும்
பின்னடைவாகக் கருதப்படலாம்... அல்லது
புது வகையான முன்னேற்றத்திற்கான
ஆரம்பமாகக் கருதப்படலாம்...

எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் ஒருநாள் சந்தோசமாக இருப்போம்
என்று பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே கழித்துக்
கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நிகழ்காலம் மற்ற காலத்தை விட
ஒருவகையில் மேலானது... அது நம்முடையது ...

வாழ்கையில் போராடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும்...
வெற்றிக்கான உத்வேகத்தை தருவதும்...
அந்த வெற்றி சத்தியத்தின் வழயில் இருக்க செய்வதும்
நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உடனடி கடமை...

நீங்கள் முடிவு எடுத்திருக்கிறிர்கள் என்பதன் அடையாளம்
உங்கள் செயல் மாறியிருக்க வேண்டும்...
உங்கள் செயல் மாறவில்லை என்றால்
உண்மையில் நீங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை...

கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும்..
அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும்
அது உறுதியாக நிற்கிறது .
அதன் மேல் மோதும் ஆர்பரிக்கும்
அலைகள் அடங்கி அமைதியாகின்றன...

நமக்கு நன்றாக தெரிந்ததை...
சரியென்று புரிந்ததை செய்ய கூட பலர் துணிவதில்லை
ஆனால் துணிந்து இறங்கும் போது
நம்பிக்கை பல மடங்கு பெருகுவதோடு
நினைத்ததை விட மகத்தான வெற்றி பெற முடியும்...

உங்களால் பறக்க முடியவில்லையா ? ஓடுங்கள் ...
உங்களால் ஓட முடியவில்லையா ? நடங்கள் ...
உங்களால் நடக்க முடியவில்லையா ? தவழுங்கள் ..
ஆனால் ,எதைச்செய்தாலும்
உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள் ..

எப்பொழுது உங்களால் கண்களுக்கு
தெரியாதனவற்றை பார்க்க முடிகிறதோ
எப்பொழுது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை
உங்களுக்கு வருகிறதோ... அப்பொழுது எதை உங்களால் முடியாது என்று
உலகம் சொல்கிறதோ... அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்...

ஒரு மனிதன் வெளியே செய்வது
உள்ளே நினைப்பதன் வெளிபாடுதான்...
செயல் திறனோடு வேலை செய்ய...
அவன் தூய்மையாக யோசிக்க வேண்டும்...
மேலாக நடந்து கொள்ள... மேலாக சிந்திக்க வேண்டும்...

எங்கு படித்து இருந்தாலும் சரி.. அல்லது யார் சொல்லி இருந்தாலும் சரி..
அது முக்கியமில்லை அவற்றை நம்பாதே
அது நான் சொல்லி இருந்தாலும் கூட
உன்னுடைய அறிவுக்கும் உனக்கு உள்ள
பொதுமையான உணர்வுக்கும் ஒத்து வராவிட்டால்...

ஒரு முயற்சி போதும்...!
முயற்சிகள் தொடங்க ஒரு மரம் போதும்...
வானம் ஒன்று தொடங்க ஒரு மனது போதும்...
உத்வேகம் வழங்க ஒரு முடிவு போதும்...
இலட்சியம் வகுக்க...!

பிரபஞ்சத்துடன் மனிதனக்குள்ள ஒற்றுமை பற்றி
எனக்கு சந்தேகமில்லை... காரணம் கடந்த உணர்வு அது...
அது ஒரு மனிதனின் இதயத்தில்
இருந்த நம்பிக்கையின்மையை
தொட்டு அதை வேரோடு அழித்தது...

முதிர்ச்சி அடைவதில் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று
சுயநலத்திலிருந்து அடுத்தவரை புரிந்து கொள்ளும் நிலைக்கு வளர்வது....
அடுத்தவர்களுக்கு ஒருவனாக தன்னை பார்க்காமல்...
தனக்கு அடுத்தவர் செய்ய விரும்புவதை
அடுத்தவர்க்கு செய்யாமல் ஒருவன் முதிர்ச்சி அடைவதில்லை...

தீர்மானமான தேவையற்ற வேகம் இல்லாமல்
முன்னேறுபவனுக்கு எந்தப் பாதையும் நீண்டதில்லை...
பொறுமையோடு வெற்றிக்காக
தன்னைத் தயார் செய்து கொள்பவனக்கு
அது தொலைவில் இருப்பதில்லை...

சந்தேகத்துடனோ அவநம்பிக்கையுடனோ
பயத்துடனோ நாம் அணுகினால்
நீடித்த அமைதியை நாம் பெற முடியாது...
பொறுப்பினால் ஏற்படும் புரிதல்...நம்பிக்கை..
தைரியத்துடன் நாம் முயன்றால் தான் அதை அடைய முடியும்...

இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன்...
எனவே யாருக்காவுது எந்த நன்மையாவுது செய்ய முடிந்தால்...
யாருக்காவுது எதாவுது அன்பை என்னால் காட்ட முடிந்தால்...
நான் இப்பொழுது செய்து விடுகிறேன்...
தள்ளி போடவோ ஒதுக்கவோ கூடாது...
ஏன் எனில் இந்த வழியாக நான் மறுபடி போக முடியாமல் போகலாம்...

எவன் ஒருவன் மனதிற்கு ஒரு உந்துதலை கொடுக்கும் சக்தி பெற்று
எப்பொழுதும் மனதை ஊக்குவிக்கும்
எண்ணங்களாலேயே நிரப்பி கொள்கிறானோ
நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை..
உற்சாகமூட்டும் எண்ணங்களை நிரப்பி கொள்கிறானோ..
அவன்.. வாழ்க்கையின் ஒரு பெரும் புதிரை விடுவித்தவனாவான்...

உலகங்களே உங்களை அறிந்திருக்கும்
அறிவு கூட மேலோட்டமான அறிவு தான்
மற்றவர்கள் உங்களை குறைவாக எடைபோட்டால்
அதற்காக வருந்தாதிர்கள்...
உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும் போது தான்...
உலகுக்கும் உங்களுக்கும்... உங்களை பற்றி தெரிகிறது...

இறுக்கமான சூழலை எதிர்கொண்டு
எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால்...
இன்னும் ஒரு நிமிடமும் நீடிக்க முடியாது என்று
தோன்றினால் கூட கைவிட்டு விடாதிர்கள்...
ஏனெனில் அந்த இடத்தில்..
அந்த நேரத்தில் தான் வாழ்வு திசை திரும்பும்...

நம்முடைய ஆர்வத்தை இழக்கும் நிலைமை பற்றி
நாம் எச்சரிக்கையாக இருப்போம் எதாவது ஒன்றில்
நாம் எப்பொழுதும் பெருமைக்குரியவர்களாகவே இருப்போம்
எதுவெல்லாம் நம்மை உயர்ந்த நிலைமைக்கு உள்ளாக்குகிறதோ
அதற்கான பாராட்டுதலை பெறுவதற்கு முயற்சி செய்வோம்...
அதில் நாம் காட்டும் ஆர்வம் தான் நம்முடைய வாழ்க்கையை
வளமடைய செய்து அழகுபடுத்துகிறது

பல ஆறுகள்.. விண்ணில் இருந்து மழை..
பல மருத்துவ குணமுள்ள நதிகள் போய் சேர்ந்தாலும்
கடலின் சுவை மாறுவதில்லை...
அதே போல் தைரியமுள்ளவன் நின் மனத்தை
சோதனையின் கனம் தாக்குவதில்லை..
அது தன் சமநிலையை நீடித்து இருக்கிறது..
ஏன் எனில் அது வெளி சுழலை விட
அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது...

வாழ்க்கை நம் மீது சில நேரம் பூக்களை வீசும்...
சில நேரம் பந்துகளை வீசும்...
பூக்கள் வீசினால் வைத்து கொள்ளுங்கள்...
பந்துகள் வீசினால் விளையாடி கொள்ளுங்கள்...
பாறாங்கற்களை வீசினால் விலகி கொள்ளுங்கள்...
மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது
உங்கள் பலங்களை நினைத்து கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களை புகழும் போது
உங்கள் பலவீனங்களை நினைத்து கொள்ளுங்கள்...

சோதனைகளைக் கடந்து செல்வது...
ஒரு வெற்றியிலிருந்து இன்னொரு வெற்றி பெறுவது...
புதிய ஆசைகளை உண்டாக்குவது...
அவை நிறைவேறுவதைப் பார்ப்பதைவிட
வாழ்வில் சந்தோசமானது வேறில்லை...
உயர்ந்த.. பாராட்டதக்க முயற்சியில் ஈடுபட்டு
பாடுபடுபவனுக்கு சோர்வுகள்...
நம்பிக்கையினால் களைகின்றன...
பின்னர் சந்தோஷம் வந்து சேர்கிறது...
பிரச்சனைகளோடு போராடி அவற்றை
வெல்வது தான் மனிதத் திறமையின் உச்சகட்டம்.

No comments:

Post a Comment